tamilnadu

img

ஜெர்மன் நிதி உதவியுடன் 2000 மின்சார பேருந்துகள்

கரூர்,செப்.20- ஜெர்மன் நாட்டு நிதி உதவியுடன் 2,000 மின்சார  பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, கரூரில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசுப்  பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், விரைவில் 50 ஏசி பேருந்துகள், 2,000 மின்சார பேருந்துகள், இயக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, அரசு போக்குவரத்து கழக கும்ப கோணம் மண்டலத்துக்குட்பட்ட கோட்டங்களில் கடந்த 2018 - 2019 ஆண்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற  தொழிலாளர்களுக்கு, ரூ. 219 கோடியே 80 லட்சம்  மதிப்பிலான வருங்கால வைப்பு நிதி, விடுமுறை சம்பளம், பணிக்கொடை, ஓய்வூதிய கடன் தொகை,  பங்களிப்பு ஓய்கூதியத் திட்டம் ஆகிய 5 பணப்பயன்க ளுக்கான காசோலை களை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை செயலா ளர் இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் கீதா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.